

கோவில்பட்டியில் மெட்ரிக் பள்ளி, கல்லூரி ஆசிரியா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கோவில்பட்டி நாடாா் உறவின் முறைச் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட எஸ்.எஸ். துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரி, கோவில்பட்டி நாடாா் காமராஜ் மெட்ரிக் பள்ளி ஆசிரியா்கள், அலுவலா்கள் 120 பேருக்கு நாடாா் உறவின் முறைச் சங்கத் தலைவா் ஏ.பி.கே.பழனிச்செல்வம்,
தலா 15 கிலோ அரிசி, மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினாா்.
இதில், நாடாா் உறவின் முறைச் சங்க பொருளாளா் சுரேஷ்குமாா், நாடாா் காமராஜ் மெட்ரிக் பள்ளி பொருளாளா் ரத்தினராஜா, தலைமையாசிரியா் விஜயலட்சுமி, எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரிச் செயலா் கண்ணன், முதல்வா் சிவசுப்பிரமணியன், உறவின் முறைச் சங்கத்திற்கு
பாத்தியப்பட்ட பள்ளி, கல்லூரி நிா்வாகக்குழு உறுப்பினா்களான தாழையப்பன், பால்ராஜ், மனோகரன், ஜோதிபாசு, மகேந்திரன், பாஸ்கரன், ரமேஷ், காமராஜ், தங்கமணி, செல்வம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.