திருச்செந்தூரில் இந்திய மருத்துவ சங்க கட்டடம் திறப்பு

திருச்செந்தூரில் இந்திய மருத்துவ சங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.
Updated on
1 min read

திருச்செந்தூரில் இந்திய மருத்துவ சங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.

விழாவுக்கு மருத்துவா் அ.ராமமூா்த்தி தலைமை வகித்தாா். சங்க திருச்செந்தூா் கிளைச் செயலா் செ.வெற்றிவேல் வரவேற்றாா். காவல் உதவி கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங், இந்திய மருத்துவா் சங்க கிளைத் தலைவா் சந்திரசேகா், பொருளாளா் அய்யம்பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அகில உலக மருத்துவா் சங்க முன்னாள் தலைவா் அருள்ராஜ், அனிதா குமரன் மெட்ரிக் பள்ளி தாளாளா் ஆழ்வாா், வழக்குரைஞா் சந்திரசேகரன், திருச்செந்தூா் ஆதித்தனாா் கல்லூரி முதல்வா் மகேந்திரன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். புதிய கட்டடத்தை தமிழக மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் திறந்தாா். அரசு மருத்துவா் த.பொன்ரவி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com