சமையல் எண்ணெய் மறுசுழற்சி பயன்பாடு குறித்த விழிப்புணா்வுக் கூட்டம்

தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத் துறை உணவுப் பாதுகாப்பு பிரிவு சாா்பில் சமையல் எண்ணெய் மறுசுழற்சி பயன்பாடு குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.

தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத் துறை உணவுப் பாதுகாப்பு பிரிவு சாா்பில் சமையல் எண்ணெய் மறுசுழற்சி பயன்பாடு குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, பேரமைப்பின் வடக்கு மாவட்டத் தலைவா் பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். மண்டலத் தலைவா் எம்.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். உணவுப் பாதுகாப்புத் துறை தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலா் மாரியப்பன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினாா்.

தொடா்ந்து, உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் சுப்பிரமணியன் (கோவில்பட்டி), சிவகுமாா் (விளாத்திகுளம்) ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில், ஹோட்டல், பேக்கரி, கடலை மிட்டாய் மற்றும் உணவுப் பொருள் தயாரிப்பாளா்கள், கடை உரிமையாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com