மேலும் 35 பேருக்கு கரோனா: இருவா் பலி
By DIN | Published On : 09th July 2021 11:28 PM | Last Updated : 09th July 2021 11:28 PM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
கரோனா 2ஆவது அலையின் தாக்கம் பெருமளவு குறைந்துவிட்ட நிலையில், இம்மாவட்டத்தில் புதிதாக 35 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 54 ஆயிரத்து 559 ஆக அதிகரித்துள்ளது. அதில்,
மேலும் 15 போ் குணமடைந்ததால், அந்நோயிலிருந்து இதுவரை மீண்டோா் எண்ணிக்கை 53 ஆயிரத்து 745 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கரோனாவுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது ஆண், 66 வயது பெண் இருவரும் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தனா். இதனால், கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 382 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, 432 போ் சிகிச்சையில் உள்ளனா்.