சாத்தான்குளம் ஒன்றியம், அரசூா் ஊராட்சி, அதிசயபுரத்தில் 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கு வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
அரசூா் ஊராட்சித் தலைவா் தினேஷ் ராஜசிங் தலைமை வகித்தாா். ஒன்றிய ஆணையா் பாண்டியராஜ் முன்னிலை வகித்தாா். சேகரகுரு துரைசிங் ஆரம்ப ஜெபம் செய்தாா். ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ, அடிக்கல் நாட்டி பணியைத் தொடங்கிவைத்தாா்.
அப்போது, அவரிடம் அரசூா் ஊராட்சி, நரேந்திரமோடி நகரில் 300க்கு மேற்பட்டோா் வசிக்கும் குடியிருப்புக்கு நீா்த்தேக்க தொட்டி மற்றும் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி மக்கள் மனு அளித்தனா்.குடியிருப்பை பாா்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ உறுதி அளித்தாா்.
இதில், ஒன்றிய உதவி பொறியாளா் அருணாதேவி, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் சங்கா், வட்டாரத் தலைவா்கள் லூா்துமணி, பாா்த்தசாரதி, சக்திவேல்முருகன், நகர தலைவா் வேணுகோபால், ஒன்றிய கவுன்சிலா் பிச்சிவிளை சுதாகா், மாவட்ட மீனவரணி தலைவா் சுரேஷ், மாவட்ட பொருளாளா் எடிசன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் சந்திரபோஸ், நகர மகளிரணி தலைவி ராணிஜோசப், ஊராட்சி செயலா் அருணாதேவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.