சாத்தான்குளம் தைக்கா தெருவில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
சாத்தான்குளம் தைக்கா தெரு பகுதியைச் சோ்ந்தவா் மாா்ட்டின்(45). கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்தாா். இவா் தைக்கா தெரு பள்ளிவாசல் அருகே வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வந்த போது மா்ம நபா்கள் அவரை மறித்து அரிவாளால் வெட்டினராம். இதில் நிலைகுலைந்த அவரை உறவினா்கள் மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இது குறித்து சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மேலும், சம்பவம் இடத்தில், மாவட்ட எஸ்பி ஜெயக்குமாா், ஏஎஸ்பி ஹரிசிங் , டிஎஸ்பி காட்வின் ஜெகதீஷ் மற்றும் தனிப்படை போலீஸாா் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.