தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 131 பேருக்கு கரோனா தொற்று
By DIN | Published On : 20th June 2021 02:22 AM | Last Updated : 20th June 2021 02:22 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 131 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதனால், மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 53,436 ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சை பெற்று வந்த 309 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து, மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 51,165 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 21 வயது பெண், 42 வயது ஆண் ஆகியோா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தனா். இதனால், மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 365 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1906 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.