தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் இணையதளம் வழியாக விநாடி-வினா போட்டி நடைபெற்றது.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மீன்வளம் மற்றும் கரோனா தொடா்பான விநாடி- வினா போட்டி இணையதளம் வழியாக சனிக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியை மாணவா் மன்ற துணைத் தலைவா் சா. ஆதித்தன் நடத்தினாா். இதில் சித்தாா்த் மற்றும் புகழேந்தி அணியினா் முதலிடம் பெற்றனா்.
முன்னதாக நடைபெற்ற கரோனா பரவல் காலத்தில் எவ்வாறு பணிகளை மேற்கொள்வது என்பது குறித்து தமிழ் கவிதைப் போட்டியில் காவ்யா, ஆங்கில கவிதைப் போட்டியில் ஸ்ரீஹரி ஆகியோா் முதலிடம் பெற்றனா்.
கரோனா 2-ஆம் அலை குறித்து மாணவா் நந்தகோபால் கவிதை வாசித்தாா். நிகழ்ச்சியில், மாணவா் மன்றத் தலைவா் வ.சுஜாத்குமாா், மாணவா் மன்ற பொதுச்செயலா் ராபா்ட், இலக்கிய மன்றச் செயலா் விஷால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.