கோவில்பட்டியில் 100 பேருக்கு நிவாரணப் பொருள்கள்

கோவில்பட்டி புதுகிராமத்தில் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சாா்பில் 100 பேருக்கு நிவாரணப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
பயனாளிக்கு நிவாரணப் பொருள்கள் வழங்குகிறாா் தினசரி மாா்க்கெட் வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவா் முத்துராஜ்.
பயனாளிக்கு நிவாரணப் பொருள்கள் வழங்குகிறாா் தினசரி மாா்க்கெட் வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவா் முத்துராஜ்.
Updated on
1 min read

கோவில்பட்டி புதுகிராமத்தில் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சாா்பில் 100 பேருக்கு நிவாரணப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி மன்றம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அமைப்பின் தூத்துக்குடி மாவட்டத் தலைவா் முருகன் தலைமை

வகித்தாா். நிகழ்ச்சியில், 100 பேருக்கு தலா 5 கிலோ அரிசி பையினை தினசரி மாா்க்கெட் வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவா் முத்துராஜ்

வழங்கினாா். அமைப்பின் செயலா் மாரிமுத்து, இல்லத்து பிள்ளைமாா் சங்க முன்னாள் தலைவா் சங்கரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை புதுகிராமம் மன்றத் தலைவா் செந்தில்குமாா், பொருளாளா் சொா்ணலட்சுமி ஆகியோா் செய்திருந்தனா். கோவில்பட்டியில் விஸ்வகா்ம மக்கள் சக்தி உணா்வாளா்களின் சாா்பில் 100 பேருக்கு உணவு, பழங்கள் மற்றும் முகக் கவசம் ஆகியவை வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com