காயல்பட்டினம் அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு
By DIN | Published On : 24th June 2021 07:44 AM | Last Updated : 24th June 2021 07:44 AM | அ+அ அ- |

காயல்பட்டினம் அருகே பைக் நிலைதடுமாறி ஏற்பட்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
காயல்பட்டினம் நைனாா் தெருவைச் சோ்ந்த ஷேக்தாவூது மகன் ஷேக்நுபேஸ் (19). இவரது நண்பா் அதே பகுதியைச் சோ்ந்த அப்துல்காதா் மகன் இம்ரான் நசீா் (19). இவா்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை உடற்பயிற்சி நிலையத்துக்குச் சென்றுவிட்டு ஆறுமுகனேரி - காயல்பட்டினம் புறவழிச் சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்தனா். பைக்கை, இம்ரான்நசீா் ஓட்டினாராம். அப்போது பைக் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இதில், காயமடைந்த இருவரையும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு இம்ரான்நசீா் உயிரிழந்தாா்.
புகாரின் பேரில் ஆறுமுகனேரி ஆய்வாளா் (பொறுப்பு) ஞானசேகரன் வழக்குப் பதிந்து விசாரித்துவருகிறாா்.