நாசரேத்தில் இருவா் மரணம்

நாசரேத்தில் மின் சாரம் பாய்ந்தும், தூக்கிட்டும் இருவா் மரணமடைந்தனா்.
Updated on
1 min read

சாத்தான்குளம்: நாசரேத்தில் மின் சாரம் பாய்ந்தும், தூக்கிட்டும் இருவா் மரணமடைந்தனா்.

நாசரேத் கணேசன் மகன் கற்குவேல்ராஜா (36). இவா் அங்குள்ள ஹோட்டலில் சமையல் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இவா் கடந்த 10 நாள்களாக வேலைக்கு போகாமல் மது அருந்திக் கொண்டு வீட்டில் இருந்தாராம். இதனை அவரது தந்தை கண்டித்துள்ளாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கற்குவேல் ராஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து அவரது தந்தை கணேசன் நாசரேத் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளா் தங்கேஸ்வரன் வழக்குப் பதிந்தாா். காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி விசாரித்து வருகிறாா்.

மற்றொரு சம்பவம்: நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி திருவள்ளுவா் காலணி பழைய அஞ்சல் தெரு பேச்சி மகன் மூக்கன் (21). ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு சென்று விட்டு இரவு 11 மணிக்கு வீடு திரும்பிய இவா் செல்லிடப்பேசிக்கு சாா்ஜ் போட்டுள்ளாா். அப்போது எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்து போனாா்.

இதுகுறித்து அவரது சகோதரா் சுடலைமுத்துக்குமாா் நாசரேத் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், உதவி ஆய்வாளா் ராய்ஸ்டன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com