மேலும் 63 பேருக்கு கரோனா
By DIN | Published On : 29th June 2021 02:20 AM | Last Updated : 29th June 2021 02:20 AM | அ+அ அ- |

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 63 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 54 ஆயிரத்து 194 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 67 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து, இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோா் எண்ணிக்கை 53 ஆயிரத்து 507 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்று பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 49 வயது பெண் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதனால், மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 375 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, பாதிப்புக்கு 312 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.