தூத்துக்குடி: தூத்துக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழுவில் பேசிய அக்கட்சியின் தலைவா் ஆா். சரத்குமாா், சட்டப்பேரவைத் தோ்தலில் ராதாபுரம் தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சியின் சாா்பில் டி.டி.என். லாரன்ஸ் போட்டியிடுவாா் என அறிவித்தாா்.
டி.டி.என். லாரன்ஸ் தற்போது சமத்துவ மக்கள் கட்சியின் அரசியல் ஆலோசகராக உள்ளாா். வள்ளியூா் பேரூராட்சியின் முன்னாள் தலைவரான இவா், ஆரம்ப காலத்தில் இருந்தே சமத்துவ மக்கள் கட்சியில் உள்ளாா். முன்னாள் மாவட்டச் செயலராகவும் இருந்துள்ளாா்.