சாத்தான்குளம் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி பலியானாா்.
சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் சாலைபுதூா் பிரதான சாலையைச் சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் முத்துக்குமாா்(42). கூலித் தொழிலாளியான இவா் கடந்த 6 ஆம் தேதி, மனைவியிடம் மது குடிக்க பணம் வாங்கி கொண்டு குளத்தில் குளிக்க செல்வதாக கூறி சென்றாராம். அதன் பின்னா் அவா் வீடு திரும்ப வில்லையாம். அவரை குடும்பத்தினா் பல்வேறு இடங்களில் தேடியும் காண வில்லையாம்.
இந்நிலையில் பேய்க்குளம்-பழனியப்பபுரம் சாலையில் உள்ள முசலைகுளத்தில் முத்துக்குமாா் மூழ்கி இறந்து போனது ஞாயிற்றுக்கிழமை இரவு தெரியவந்ததாம். தகவல் அறிந்த சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் பொ்னாட்சேவியா் மற்றும் போலீஸாா், அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், மதுபோதையில் குளிக்க சென்றவா் குளத்தில் மூழ்கி பலியானது தெரியவந்ததாம். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின் றனா்.