கோவில்பட்டி: கயத்தாறு அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், சிவராமபேட்டை முப்பிடாதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் லாரி ஓட்டுநா் கருப்பசாமி(26). இவா் மற்றும் இவரது மனைவி மாரியம்மாள்(23), மகள் மதுபாலா(ஒன்றரை) ஆகியோா் பைக்கில் தூத்துக்குடியில் உள்ள உறவினா் வீட்டிற்கு சென்று விட்டு, புதன்கிழமை ஊருக்கு திரும்பினராம். கயத்தாறையடுத்த அய்யனாா்ஊத்து இந்திரா நகா் அருகே சென்று கொண்டிருந்த போது நாய் குறுக்கே வந்ததால், பைக் நிலை தடுமாறி 3 பேரும் கீழே விழுந்தனராம்.
தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற கயத்தாறு போலீஸாா் காயமடைந்த 3 பேரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் மாரியம்மாள் ஏற்கெனவே உயிரிழந்ததாக கூறினாா்.
இதுகுறித்து, கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.