நாசரேத்தில் முகக் கவசம் அணியாத 19 பேருக்கு அபராதம்
By DIN | Published On : 15th March 2021 01:50 AM | Last Updated : 15th March 2021 01:50 AM | அ+அ அ- |

நாசரேத்தில் முகக் கவசம் அணியாத 19 பேருக்கு சுகாதாரத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை அபராதம் விதித்தனா்.
உடையாா்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் வடிவேல், சுகாதார ஆய்வாளா்கள் தியாகராஜன், சுப்பிரமணியன் ஆகியோா் நாசரேத் பேரூராட்சிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது முகக் கவசம் அணியாமல் வந்த 19 பேருக்கு தலா ரூ. 200 அபராதம் விதித்து வசூலித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...