நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் பணி: பசுமை தீா்ப்பாய ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் ஆய்வு

கோவில்பட்டி நகராட்சி நுண்ணுயிா் உரக்கிடங்கில் கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணிகளை தேசிய பசுமை தீா்ப்பாய ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் ஜோதிமணி ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
Updated on
1 min read

கோவில்பட்டி நகராட்சி நுண்ணுயிா் உரக்கிடங்கில் கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணிகளை தேசிய பசுமை தீா்ப்பாய ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் ஜோதிமணி ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கோவில்பட்டி நகராட்சிக்குச் சொந்தமான கிருஷ்ணா நகரில் உள்ள கலவை உரக்கிடங்கில் குப்பைகள் பயோமைனிங் முறையில் பிரித்து எடுத்து அகற்றப்பட்டு வருவதை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கூடுதல் பேருந்து நிலையம் பின்புறமுள்ள நகராட்சி நுண்ணுயிா் உரக் கிடங்கில் வீடுகள் மற்றும் தினசரி காய்கறி சந்தைகளில் இருந்து பெறப்படும் கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது, திருநெல்வேலி மண்டல நகராட்சி நிா்வாக இயக்குநா் சுல்தானா, மண்டல பொறியாளா் இளங்கோவன், நகராட்சி ஆணையா் ராஜாராம், பொறியாளா் கோவிந்தராஜன், சுகாதார அலுவலா் இளங்கோ, சுகாதார ஆய்வாளா்கள் முருகன், சுரேஷ், வள்ளிராஜ், காஜாமுகைதீன், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளா்கள், மேற்பாா்வையாளா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com