கோவில்பட்டி தொகுதியில் அமமுக வேட்பாளர் டி.டி.வி.தினகரன் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கரநாராயணனிடம் அவர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். உடன் கட்சியின் தேர்தல் பிரிவுச் செயலாளர் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா, வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.