ஆறுமுகனேரி அருகே பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
ஆறுமுகனேரி அருகே தலைவன்வடலி வடக்கு தெருவை சோ்ந்தவா் கொடியான்(55). இவருக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனா். இவரது இளைய மகள் சந்தனஜென்ஸி(16). பிளஸ் 2 பயின்று வந்தாா்.
கொடியான் மற்றும் அவரது மனைவியும் திங்கள்கிழமை வேலைக்கு சென்ற நிலையில், தோ்வு பயத்தில் இருந்த சந்தனஜென்ஸி வீட்டில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.