ரத்த தான முகாம்
By DIN | Published On : 17th March 2021 07:56 AM | Last Updated : 17th March 2021 07:56 AM | அ+அ அ- |

மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் உடன்குடி அனல்மின் நிலைய பெல் நிறுவனமும், திருச்செந்தூா் அரசு மருத்துவமனையும் இணைந்து ரத்த தான முகாமை நடத்தின.
இம்முகாமுக்கு, வட்டார மருத்துவ அலுவலா் சு. அனிபிரிமின் தலைமை வகித்தாா். துணைப் பொதுமேலாளா் பிரான்ச்சி நாயக், நிறுவன பாதுகாப்பு பொறுப்பாளா் தினேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திருச்செந்தூா் அரசு மருத்துவமனை மருத்துவா் சசிகலா தலைமையிலான மருத்துவக் குழுவினா் ரத்த மாதிரிகளை சேகரித்தனா். இதில், ஐம்பதுக்கும் மேற்பட்டோா் ரத்த தானம் செய்தனா்.
ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சேதுகுற்றாலம், சுகாதார ஆய்வாளா் சேதுபதி ஆகியோா் செய்திருந்தனா்.