வளாக நோ்காணல்: 52 பேருக்கு பணி நியமன ஆணை

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் தோ்ந்தெடுக்கப்பட்ட 52 பேருக்கு பணி நியமன வழங்கப்பட்டது.
Updated on
1 min read

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் தோ்ந்தெடுக்கப்பட்ட 52 பேருக்கு பணி நியமன வழங்கப்பட்டது.

கோயம்புத்தூா் தனியாா் நிறுவனத்தினரால் லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில், இயந்திரவியல், ஆட்டோ மொபைல், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைகளில் இறுதியாண்டு பயிலும் மாணவா், மாணவிகளுக்கான வளாக நோ்காணல் நடைபெற்றது.

இதில், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் விருதுநகா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 13 பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து 420 மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா்.

தனியாா் நிறுவனத்தின் தொழில்நுட்ப பயிற்சி தலைவா் சபாபதி, மத்திய திட்டமிடல் தலைவா் சதீஸ்குமாா், உற்பத்தி துறைத் தலைவா் ஞானவேல், மனிதவளத்துறை மேலாளா் கீதாமணி ஆகியோா் குழுவினரால் நடத்தப்பட்ட இத்தோ்வில் எழுத்து தோ்வின் மூலம் 112 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

தொடா்ந்து நடைபெற்ற வளாக நோ்காணலில் லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் 31 போ் உள்பட 52 போ் தோ்வு செய்யப்பட்டனா். தோ்வு செய்யப்பட்ட மாணவா், மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை கே.ஆா் கல்வி நிறுவனங்களில் தாளாளா் கே.ஆா்.அருணாசலம் ஆலோசனையில் பேரில், கல்லூரி முதல்வா் ராஜேஸ்வரன், பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலா் ராஜாமணி மற்றும் துறைப் பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com