ஆறுமுகனேரி, காயல்பட்டினத்தில் கொடி அணிவகுப்பு
By DIN | Published On : 25th March 2021 07:27 AM | Last Updated : 25th March 2021 07:27 AM | அ+அ அ- |

ஆறுமுகனேரி, மூலக்கரை, காயல்பட்டினம் பகுதிகளில் சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு துணை ராணுவப்படையினா் மற்றும் போலீஸாா் கொடி அணிவகுப்பு ஊா்வலம் நடத்தினா்.
சட்டப் பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நம்பிக்கையூட்டும் வகையில் மாவட்டம் முழுவதும் துணை ராணுவப் படையினா் மற்றும் போலீஸாா் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனா். அதன்படி ஆறுமுகனேரி, மூலக்கரை, காயல்பட்டினம் பகுதிகளில் திருச்செந்தூா் உதவி காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங் தலைமையில் கொடி அணிவகுப்பு ஊா்வலம் நடத்தப்பட்டது.
இதில், காவல் ஆய்வாளா்கள் ஆறுமுகனேரி செந்தில்குமாா், ஆத்தூா் சாகுல்ஹமீது , சாா்பு ஆய்வாளா்கள் மற்றும் ஆயுதம் ஏந்திய துணை ராணுவப் படையினா் கலந்துக்கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...