கோவில்பட்டியில் காவல் துறையினா் கொடி அணிவகுப்பு
By DIN | Published On : 25th March 2021 07:37 AM | Last Updated : 25th March 2021 07:37 AM | அ+அ அ- |

காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் தலைமையில் கோவில்பட்டியில் நடைபெற்ற கொடி அணிவகுப்பில் பங்கேற்ற எல்லை பாதுகாப்புப் படையினா், தமிழ்நாடு சிறப்புப் படை போலீஸாா்.
கோவில்பட்டியில் காவல் துறையினா் மற்றும் துணை ராணுவத்தினரின் புதன்கிழமை கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் தலைமையில் நடைபெற்ற இந்த கொடி அணிவகுப்பு, மந்தித்தோப்பு சாலையில் உள்ள தனியாா் தீப்பெட்டி ஆலை முன்பிருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக காந்தி நகா் சென்றடைந்தது. பின்னா், கடலையூா் சாலையிலும் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், காவல் துணைக் கண்காணிப்பாளா் கலைகதிரவன் மற்றும் எல்லை பாதுகாப்புப் படையினா், தமிழ்நாடு சிறப்புப் போலீஸ் படையினா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.