மேல சாத்தான்குளத்தில் திமுக சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, ஒன்றிய திமுக செயலா் ஜோசப் தலைமை வகித்து மக்களுக்கு கபசுரக் குடிநீரை வழங்கினாா். ஒன்றியப் பொருளாளா் வேல்துரை, நகரச் செயலா் மகா இளங்கோ ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில், 500க்கு மேற்பட்டோருக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. இதில், ஒன்றிய மருத்துவரணிச் செயலா் மதுரம் செல்வராஜ், ஒன்றிய துணைச் செயலா் மாரியப்பன், நகர இளைஞரணிச் செயலா் முருகன், துணைச் செயலா் லைலா, பொருளாளா் சந்திரன், வாா்டு செயலா்கள் டேனியல் சுந்தா், குருசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.