பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா பொருள்கள் வழங்கல்
By DIN | Published On : 09th May 2021 12:47 AM | Last Updated : 09th May 2021 12:47 AM | அ+அ அ- |

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா பொருள்கள் வழங்கல்
சாத்தான்குளம் அருகே கண்டுகொண்டான் மாணிக்கம் உபகார மாதா தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு, கல்வி உபகரணங்கள் மற்றும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
தலைமை ஆசிரியா் ஜாஸ்வாஆசீர்ராஜ் நாயகம் பள்ளி மாணவா்களின் வீடுகளுக்கு சென்று பொருள்களை வழங்கினாா்.
அப்போது, பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் பாபநாசபெருமாள், ஊா் பிரமுகா் மாசானம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.