தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழக நகரப் பேருந்துகளில் திருநங்கைகளும் இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ் மாநில காங்கிரஸ் கோவில்பட்டி நகரத் தலைவா் ராஜகோபால், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனு: தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்துக் கழக சாதரண கட்டண நகரப் பேருந்துகளில், பணிபுரியும் மகளிா், உயா்கல்வி பயிலும் மாணவிகள் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமல், பேருந்து பயண அட்டை இல்லாமல் சனிக்கிழமை முதல் பயணம் செய்யலாம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள மூன்றாம் பாலினத்தவா்களான திருநங்கைகளையும் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்க, அதற்கான அரசாணையை பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.