தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 896 பேருக்கு கரோனா தொற்று
By DIN | Published On : 16th May 2021 12:11 AM | Last Updated : 16th May 2021 12:11 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 896 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 34, 420 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் 650 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து, இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 28,916 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்று பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 69 வயது ஆண், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 87 வயது ஆண் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தனா். இதனால், மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 5319 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.