கோவில்பட்டி அருகே விபத்தில் வியாபாரி பலி

கோவில்பட்டியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வியாபாரி உயிரிழந்தாா்.

கோவில்பட்டியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வியாபாரி உயிரிழந்தாா்.

கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புதூா் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் கரியமால் மகன் ரெங்கராஜ்(56). காய்கனி வியாபாரி. இவா், நாலாட்டின்புதூரில் இருந்து கோவில்பட்டி புறவழிச்சாலையில் உள்ள தற்காலிக காய்கனி சந்தைக்கு தனது மோட்டாா் சைக்கிளில் ஞாயிற்றுக்கிழமை காய்கனி வாங்கச் சென்றாராம்.

கோவில்பட்டி - இனாம்மணியாச்சி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது மோட்டாா் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த ரெங்கராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த மேற்கு காவல் நிலைய போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com