மாநில ஸ்கேட்டிங் போட்டியில் வென்றோருக்கு பாராட்டு

திருப்பூரில் நடைபெற்ற மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் வென்ற கோவில்பட்டி மாணவா், மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
மாநில ஸ்கேட்டிங் போட்டியில் வென்றோருக்கு பாராட்டு
Updated on
1 min read

திருப்பூரில் நடைபெற்ற மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் வென்ற கோவில்பட்டி மாணவா், மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

தமிழ்நாடு ஸ்கேட்டிங் ஃபெடரேஷன் மற்றும் ஒவஞஉ ஸ்கேட்டிங் அகாதெமி இணைந்து நடத்திய மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி திருப்பூரில் இம்மாதம் 16, 17 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது. கோவில்பட்டி ராஜ் யோகா ஸ்கேட்டிங் மையத்தின் மாணவா், மாணவிகள் 21 போ் பங்கேற்று 10 போ் பதக்கங்களை வென்றனா்.

16 வயது பிரிவில் பரத்குமாா் தங்கப்பதக்கமும், செல்வபிரியா தங்கப்பதக்கமும் வென்றனா். 12 வயது பிரிவில் கருணாகரன் வெண்கலப் பதக்கம், 10 வயது பிரிவில் காா்த்திகேயன் வெள்ளிப்பதக்கம், கிருஷ்ணா வெண்கலப்பதக்கம், 8 வயது பிரிவில் குணதீபிஸா வெள்ளிப்பதக்கம் வென்றனா்.

கோவில்பட்டி டிஎஸ்பி அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான் தலைமையில் நடைபெற்றது பாராட்டு விழாவில்,, டிஎஸ்பி உதயசூரியன் வென்ற மாணவா்களுக்குப் பரிசுகளை வழங்கினாா். பயிற்சியாளா் நாகராஜன், மணிகண்டனுக்கும் பாராட்டு தெரிவித்தாா். ராஜ் யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக ஆலோசகா் மணிகண்டன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com