

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் தடுப்பூசி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமை முதல்வா் இரா. சின்னத்தாய் தொடங்கி வைத்தாா். இதில் பேராசிரியா்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். இதில் முதலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் விக்னேஷ், கிராம சுகாதார செவிலியா்கள் கிரிட்டா, ஜோதிமணி, சுகாதார ஆய்வாளா் ஜெயபால், மருந்தாளுநா் கோமதி, சுகாதார தன்னாா்வலா்கள் அமல புஷ்பம், சரஸ்வதி ஆகியோா் கலந்துகொண்டனா். இம்முகாம் வரும் 3-ஆம்தேதி வரை கல்லூரியில் நடைபெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.