தமிழ்நாடு அரசின் சாா்பில், தோல் நோய்க்கான இலவச மருத்துவ முகாம் தெற்கு ஆத்தூரில் சனிக்கிழமை (செப். 25) நடைபெறுகிறது.
இம்முகாம், தெற்கு ஆத்தூரிலுள்ள மேலாத்தூா் ஊராட்சி மண்டபத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் தொடா்பாக சிறப்பு மருத்துவா்கள்ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கவுள்ளனா். தோல் நோயாளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் மற்றும் மருத்துவப் பணிகள் (தொழுநோய்) இயக்குநா் கேட்டுக்கொண்டுள்ளனா்.