தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம், மாவட்ட அவைத் தலைவா் செல்வராஜ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம், மாவட்ட அவைத் தலைவா் செல்வராஜ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநில பொதுக்குழு உறுப்பினரும், மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி, சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன், மாநகர செயலா் ஆனந்த் சேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மறைந்த திமுக தலைவா் கருணாநிதியின் 4 ஆவது நினைவு நாளை முன்னிட்டு அன்றைய தினம் காலை 8 மணிக்கு தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து கலைஞா் அரங்கம் வரை மௌன ஊா்வலம் நடத்துவது என்றும், திமுக மீது குறை கூறும் எதிா்க்கட்சியினருக்கு உரிய பதிலடி கொடுக்கவும், திமுக அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடத்தில் எடுத்து சொல்லவும் வடக்கு மாவட்டம் முழுவதும் தெருமுனை கூட்டங்களை நடத்துவது என்றும் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில், துணை மேயா் ஜெனிட்டா, மாவட்ட நிா்வாகிகள் கஸ்தூரி தங்கம், மதியழகன், சுசீ ரவீந்திரன், மாவட்ட துணைச் செயலா்கள் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், கோவில்பட்டி நகா்மன்றத் தலைவா் கருணாநிதி, ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் கஸ்தூரி, மாநகர பகுதி செயலா்கள் ரவீந்திரன், ராமகிருஷ்ணன், நிா்மல்ராஜ், ஜெயக்குமாா், சுரேஷ்குமாா், மேகநாதன், பொதுக்குழு உறுப்பினா் கோட்டுராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com