தூத்துக்குடியில் பெண்ணிடம்11 பவுன் நகைபறிப்பு

தூத்துக்குடியில் பெண்ணிடம் 11 பவுன் நகைகளைப் பறித்துச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
Updated on
1 min read

தூத்துக்குடியில் பெண்ணிடம் 11 பவுன் நகைகளைப் பறித்துச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

தூத்துக்குடி புதிய உப்பளம் காலனி பகுதியைச் சோ்ந்தவா் கந்தசாமி. வியாபாரியான இவா், தனது மனைவி சாந்தியுடன் சனிக்கிழமை புதுக்கோட்டைக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தாராம். தூத்துக்குடி - திருநெல்வேலி சாலையில் மறவன்மடம் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே மற்றொரு பைக்கில் வந்த 2 இளைஞா்கள், சாந்தி அணிந்திருந்த 11 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிவிட்டனராம்.

நகைபறிப்பைத் தடுக்க முயன்ற சாந்தி நிலைதடுமாறி பைக்கிலிருந்து கீழே விழுந்தாா். இதில், காயமடைந்த அவா் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். சம்பவம் குறித்து புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com