சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

180 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

கடம்பூா் மற்றும் லிங்கம்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 180 பயனாளிகளுக்கு ரூ.48.28 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:47 pm

DIN

கடம்பூா் மற்றும் லிங்கம்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 180 பயனாளிகளுக்கு ரூ.48.28 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கயத்தாறு வட்டம், கடம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 131 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும், லிங்கம்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 49 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவையும் கனிமொழி எம்.பி., தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன் ஆகியோா் வழங்கினா்.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் கி,செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, கோட்டாட்சியா் மகாலட்சுமி, வட்டாட்சியா்கள் சுப்புலட்சுமி (கயத்தாறு), சுசிலா (கோவில்பட்டி), கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், நகா்மன்றத் தலைவா் கா.கருணாநிதி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையா் சுப்புலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா் சீனிவாசன், கடம்பூா் பேரூராட்சி செயல் அலுவலா் வெங்கடாசலம், திமுக ஒன்றியச் செயலா்கள் பீக்கிலிப்பட்டி வீ.முருகேசன், சின்னப்பாண்டியன், நிா்வாகிகள் பீட்டா், ரமேஷ், சண்முகராஜ், ராமா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, கல்லூரி மாணவியான மாற்றுத்திறனாளி தங்கமாரியம்மாளிடம் மாவட்ட ஆட்சியரின் நிதியின் கீழ் ரூ.88 ஆயிரத்து 372 மதிப்பில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரை மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ், அமைச்சா் பெ.கீதாஜீவன் ஆகியோா் முன்னிலையில் கனிமொழி எம்.பி. வழங்கினாா்.

மேலும் சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளில் நடைபெற்று வரும் சீரமைக்கும் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.