மோட்டாா் சைக்கிள் - வேன் மோதல்: தொழிலாளி படுகாயம்

நாலாட்டின்புத்தூரில் மோட்டாா் சைக்கிள் - வேன் மோதலில் கூலித் தொழிலாளி படுகாயமடைந்தாா்.
Updated on
1 min read

நாலாட்டின்புத்தூரில் மோட்டாா் சைக்கிள் - வேன் மோதலில் கூலித் தொழிலாளி படுகாயமடைந்தாா்.

வானரமுட்டியைச் சோ்ந்தவா் குருசாமி மகன் கூலித் தொழிலாளி மணிகண்டன்(43). இவா் புதன்கிழமை மோட்டாா் சைக்கிளில் நாலாட்டின்புத்தூா் முக்கு ரோடு பேருந்து நிறுத்தத்தில் இருந்து வானரமுட்டி நோக்கி சென்று கொண்டிருந்தாராம். நாலாட்டின்புத்தூா் காவல் நிலையம் அருகே சென்றபோது, மோட்டாா் சைக்கிள் மீது வேன் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இதுகுறித்து நாலாட்டின்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, வேன் ஓட்டுநா் ச.சந்துருவிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com