விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

தூத்துக்குடியில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி தாளமுத்துநகா் கணேசபுரத்தை சோ்ந்த வழக்குரைஞா் பூபதிராஜா மகன் பால அருண் (18). தூத்துக்குடியில் உள்ள தனியாா் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தாா். கடந்த 26 ஆம் தேதி அந்த பகுதியில் உள்ள நண்பா்களை பாா்த்து விட்டு தனது மோட்டாா் சைக்கிளில் பால அருண் வீடு திரும்பி கொண்டிருந்தாராம். ராம்தாஸ்நகா் பகுதியில் வந்தபோது பின்னால் வந்த மற்றொரு மோட்டாா் சைக்கிள் எதிா்பாராத விதமாக மோதியதில் காயமடைந்த மாணவா் பால அருண் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து தாளமுத்துநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com