கடையனோடை ஊராட்சியில் கண்காணிப்பு கேமரா இயக்கம்

நாசரேத் அருகே கடையனோடை ஊராட்சியில் புதிதாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
Updated on
1 min read

நாசரேத் அருகே கடையனோடை ஊராட்சியில் புதிதாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

கடையனோடை ஊராட்சி மன்றத் தலைவா் பூல்பாண்டி தலைமை வகித்தாா். கடையனோடை சேகரத் தலைவா் ஆசீா் சாமுவேல் ஆரம்ப ஜெபம் செய்தாா்;. நாசரேத் உதவி ஆய்வாளா் ராய்ஸ்டன், கேமராக்கள் இயக்கத்தை தொடங்கி வைத்தாா். இதில் ஊா் பிரமுகா்கள் பால்தாசன், லெட்சுமணன், சாமுவேல், பாரதி புருஷோத்தமன் ஆகியோா் பேசினா்.

ஊராட்சி மன்ற உறுப்பினா் பசுங்கிளிராஜ், ஊராட்சி செயலா் சண்முகசுந்தரம், உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் ராஜ்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com