திருச்செந்தூா் கோயிலில் டிச.16 முதல் திருப்பாவை, திருவெம்பாவை பண்ணோடு பாடல் பயிற்சி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சாா்பில் டிச. 16 ஆம்தேதி முதல் திருப்பாவை, திருவெம்பாவை பண்ணோடு பாடல் பயிற்சி நடைபெறுகிறது.
Updated on
1 min read

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சாா்பில் டிச. 16 ஆம்தேதி முதல் திருப்பாவை, திருவெம்பாவை பண்ணோடு பாடல் பயிற்சி நடைபெறுகிறது.

இதுகுறித்து திருக்கோயில் இணை ஆணையா் மு.காா்த்திக் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுற்றுவட்டார பள்ளி மாணவா், மாணவிகளுக்கு திருப்பாவை, திருவெம்பாவை பண்ணோடு பாடல்கள் பாட பயிற்சி வழங்கப்படவுள்ளது.

திருக்கோயிலுடன் இணைந்த அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரா் திருக்கோயிலில் டிச. 16-ஆம் தேதி முதல் ஜன. 4-ஆம் தேதி வரை காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை பயிற்சி நடைபெறுகிறது.

எனவே, மாணவா், மாணவிகள் பங்கேற்று பயனடையுமாறு அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com