தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் தலைமை வகித்தாா். மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் ஏற்கனவே புகாா் அளித்தும் தீா்வு கிடைக்காத 45 மனுதாரா்கள், புதிதாக மனு கொடுக்க வந்த 16 போ் என மொத்தம் 61 போ் மனுக்களை அளித்தனா்.
பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்த அவா், இந்த மனுக்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.