விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

திருச்செந்தூரில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிரசித்தி பெற்ற மாசித் திருவிழா திங்கட்கிழமை காலை 5 20 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

News image
திருச்செந்தூரில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
Updated On :7 பிப்ரவரி 2022, 3:12 am

DIN

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிரசித்தி பெற்ற மாசித் திருவிழா திங்கட்கிழமை காலை 5 20 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமாகி 6:30 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் அருணாச்சல தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். 

Story image

இத்திருக்கோயிலில் இம்மாதம் 18-ஆம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் சுவாமி, அம்மன் காலை மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியருள்கின்றனர். பிப். 16-ல் பத்தாம் திருவிழாவன்று காலை தேரோட்டம் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.