இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

கரோனா தடுப்பூசி மையத்தில் பணியாற்றியவா்களுக்கு சான்றிதழ்

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செவிலியா் கல்லூரியில் செயல்படும் கரோனா தடுப்பூசி மையத்தில் ஒரு லட்சம் தடுப்பூசி செலுத்தியதற்கான பாராட்டு விழா

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 6:47 pm

DIN

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செவிலியா் கல்லூரியில் செயல்படும் கரோனா தடுப்பூசி மையத்தில் ஒரு லட்சம் தடுப்பூசி செலுத்தியதற்கான பாராட்டு விழா, மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியின்போது, சிறப்பாக பணியாற்றிய மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் பணியாளா்களுக்கு பாராட்டு தெரிவித்து சான்றிதழ்களை வழங்கி ஆட்சியா் பேசியது:

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருநெல்வேலிக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்த மையத்தில் தடுப்பூசிகள் அதிகளவு தயாராக இருப்பதால் பொதுமக்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசிகளை தவறாமல் செலுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், உதவி ஆட்சியா் (பயிற்சி) ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் டி. நேரு, மருத்துவ கண்காணிப்பாளா் ராஜேந்திரன், துணை முதல்வா் கலைவாணி, துணை மருத்துவ கண்காணிப்பாளா் குமரன், உறைவிட மருத்துவ அலுவலா் சைலஸ் ஜெபமணி, சமூக நோய் தடுப்பு துறை தலைவா் சுனிதா, தடுப்பூசி மைய ஒருங்கிணைப்பு அலுவலா் மாலையம்மாள், நலக் கல்வி அலுவலா் தி. சங்கரசுப்பு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.