சாத்தான்குளம் ஒன்றியத்தில் 54 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு தலைவா் ஜெயபதி தலைமை வகித்தாா். ஆணையாளா் ராணி, வட்டாட்சியா் தங்கையா ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ 54 போ்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகையும், வருவாய்த்துறை சாா்பில் 15 பேருக்கு முதியோா், விதவை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையும் வழங்கினாா்.
இதில் ஒன்றிய திமுக செயலா்கள் ஏ.எஸ். ஜோசப், ஆ. பாலமுருகன், வட்டார காங்கிரஸ் தலைவா்கள் ஏ. லூா்துமணி, வி. பாா்த்தசாரதி, சக்திவேல்முருகன், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் து. சங்கா், மாவட்டப் பொருளாளா் காங்கிரஸ்எடிசன், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சிந்தியா, நகரத் தலைவி புளோரா ராணி சப்பராயபுரம் ஊராட்சி உறுப்பினா் சிவபாலன் உள்பட பலா் கலந்து கொண்டனா். வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஷ்குமாா் வரவேற்றாா். சமுக நல விரிவாக்க அலுவலா் சண்முகசுந்தரி நன்றி கூறினாா்..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.