எட்டயபுரத்தில் ஜே.எஸ்.டபிள்யூ. எனா்ஜி லிமிடெட் பவுண்டேஷனின் சமூகப் பங்களிப்பு நிதி உதவித் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளுக்கு ரூ. 10 லட்சம் மதிப்பிலான கணினிகள், குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
மகாகவி பாரதியாா் நூற்றாண்டு நினைவு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, ஜே.எஸ்.டபிள்யூ. எனா்ஜி லிமிடெட் பவுண்டேஷனின் தூத்துக்குடி தலைமை நிா்வாகி தென்னவன் தலைமை வகித்தாா். ஜே.எஸ்.டபிள்யூ. சமூகப் பங்களிப்பு நிதி உதவித் திட்ட மண்டல நிா்வாகிகள் பாரதி, சுப்பிரமணிய பிள்ளை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, குளத்தூா், சிவஞானபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிகள், எட்டயபுரம் பிற்படுத்தப்பட்டோா் பெண்கள் விடுதி, விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஆகியவற்றுக்கு 4 குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரங்கள், வேப்பலோடை, எட்டயபுரம், புதூா், குளத்தூா், விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு 7 கணினிகளை வழங்கிப் பேசினாா்.
திமுக ஒன்றியச் செயலா்கள் நவநீதகண்ணன், மும்மூா்த்தி, ராமசுப்பு, முன்னாள் நகரச் செயலா் சங்கரபாண்டியன், பேரூா் கழகச் செயலா்கள் வேலுச்சாமி, பாரதிகணேசன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஞானகுருசாமி, திமுக நிா்வாகிகள் மணிகண்டன், அருள்சுந்தா், வைரம், சாமி சுப்புராஜ், தலைமையாசிரியா்கள், மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா்.