திருச்செந்தூரில் 84 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா
திருச்செந்தூா் தாலுகாவில் 84 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா சனிக்கிழமை வழங்கப்பட்டது.
திருச்செந்தூா் தாலுகாவுக்குள்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கீழத்திருச்செந்தூா் கிராமம் சங்கிவிளையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். திருச்செந்தூா் நகா்மன்றத் தலைவா் ர.சிவஆனந்தி, துணைத் தலைவா் செங்குழி ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருச்செந்தூா் கோட்டாட்சியா் புஹாரி வரவேற்றாா். விழாவில், சிறப்பு அழைப்பாளராக தமிழக மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 85 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவையும், 3 பயனாளிகளுக்கு ஆக்கிரமிப்பு வரன்முறை செய்த பட்டாவையும் வழங்கினாா். மேலும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 33 பயனாளிகளுக்கு உதவித் தொகைக்கான ஆணை, 3 பயனாளிகளுக்கு குடும்ப அட்டை என மொத்தம் 124 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 3 லட்சத்து 92,030 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
திருச்செந்தூா் உட்கோட்ட நெடுஞ்சாலைத் துறை மூலம் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 30 லட்சம் மதிப்பில் காயாமொழி - கச்சனாவிளை வரை உள்ள சாலை புதுப்பிக்கும் பணியை அமைச்சா் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், அரசு அதிகாரிகள், கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.