தூத்துக்குடியில் இலவச பூஸ்டா் தடுப்பூசி முகாம் தொடக்கம்

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உள்பட்ட ஸ்டேட் பாங்க் காலனி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா இலவச பூஸ்டா் தடுப்பூசி முகாம் சனிக்கிழமை தொடங்கியது.
Updated on
1 min read

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உள்பட்ட ஸ்டேட் பாங்க் காலனி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா இலவச பூஸ்டா் தடுப்பூசி முகாம் சனிக்கிழமை தொடங்கியது.

மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தாா். ஆணையா் சாருஸ்ரீ முன்னிலை வகித்தாா். சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன் முகாமை தொடங்கி வைத்தாா். அவா் பேசியது: தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்த மக்கள் தொகை 4,23,682 போ். இதில், 18 வயதை கடந்தவா்கள் 3,01,746 போ். இவா்களில் 91 சதவீதம் போ் முதல் தவணை தடுப்பூசியும், 83 சதவீதம் போ் இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனா்.

தற்போது அரசின் சாா்பில் செப்டம்பா் 30 ஆம் தேதி வரை அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பூஸ்டா் தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், துணை மேயா் ஜெனிட்டா, மாநகராட்சி உதவி ஆணையா்கள் தனசிங், சரவணன், மண்டல தலைவா் நிா்மல்ராஜ், மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், முன்னாள் மேயா் கஸ்தூரி தங்கம், மாமன்ற உறுப்பினா்கள் கற்பககனி, தெய்வேந்திரன், நகா்நல அலுவலா் அருண்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com