ஆக.6இல் காமநாயக்கன்பட்டி மாதா திருத்தல திருவிழா கொடியேற்றம்

தூத்துக்குடி மாவட்டம், காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதாவின் திருத்தல விண்ணேற்பு பெருவிழா ஆகஸ்ட் 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம், காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதாவின் திருத்தல விண்ணேற்பு பெருவிழா ஆகஸ்ட் 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதுகுறித்து பாளை. மறை மாவட்ட ஆயா் எஸ்.அந்தோணிசாமி செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது:

வீரமாமுனிவா் பங்கு குருவாக பணியாற்றிய இத்திருத்தல விண்ணேற்பு பெருவிழா கொடியேற்றம் ஆகஸ்ட் 6ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. 7ஆம் தேதி காலை 8.30 மணிக்கு புது நன்மை விழாவும், 13ஆம் காலை 9 மணிக்கு மரியன்னை மாநாடு, 14ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு மாலை ஆராதனை - ஆடம்பர கூட்டுத் திருப்பலியும் நடைபெறும். 15ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு தேரடி திருப்பலி, இறைமக்களின் கும்பிடு சேவை நடைபெறும். காலை 6 மணி, நண்பகல் 12 மணிக்கு திருப்பலி, பிற்பகல் 2 மணிக்கு மலையாளத்தில் திருப்பலி, மாலை 4 மணிக்கு ஹிந்தியில் திருப்பலி, 6 மணிக்கு திருப்பலி - நற்கருணை பவனி நடைபெறும் என்றாா் அவா்.

முன்னதாக, திருத்தல வளாகத்தில் அசன மாளிகை, குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை ஆயா் திறந்து வைத்தாா். அப்போது, திருத்தல அதிபா் அந்தோணிஅ.குரூஸ், உதவி பங்குத்தந்தை ஜெனால்டு அ.ரீகன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com