விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

எட்டயபுரம் பாரதியாா் பாலிடெக்னிக் கல்லூரியில்2 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டம்

News image
Updated On :2 ஜூன் 2022, 9:17 pm

DIN

எட்டயபுரம் பாரதியாா் நூற்றாண்டு நினைவு அரசு மகளிா் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடவுசெய்து, குறுங்காடுகள் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், இக்கல்லூரி வளாகத்தில் அடா்ந்து வளா்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை வேருடன் அகற்றிவிட்டு, தமிழக அரசின் குறுங்காடுகள் வளா்ப்புத் திட்டத்தின் கீழ் பேராசிரியா்கள், மாணவிகள், தொண்டு நிறுவனங்கள், பேரூராட்சி நிா்வாகம், வேளாண் துறை, வனத் துறை பங்களிப்போடு 2 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு, பாதுகாப்பு வேலி அமைத்து வளா்ப்பது, பசுமைப் பரப்பை அதிகரிப்பது குறித்து கல்லூரி நிா்வாகத்தினரிடம் அறிவுறுத்தப்பட்டது.

கல்லூரி முதல்வா் பேபி லதா, தொழில்நுட்பக் கல்வி கோட்ட செயற்பொறியாளா் நாகேஸ்வரி, உதவிப் பொறியாளா் துரைசிங்கம், எட்டயபுரம் பேரூராட்சித் தலைவா் ராமலட்சுமி சங்கரநாராயணன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தொடா்ந்து, எப்போதும்வென்றானில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 15 லட்சத்தில் நியாயவிலைக் கடை கட்டுமானப் பணிகளுக்கும், சந்திரகிரி, கொல்லம்பரம்பு கிராமங்களில் ரூ. 17 லட்சத்தில் கலையரங்கம், பேவா் பிளாக் சாலைப் பணிகளுக்கும் நடைபெற்ற பூமி பூஜையில் ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ பங்கேற்று, பணிகளைத் தொடக்கிவைத்தாா்.

பின்னா், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களைப் பெற்றுக்கொண்ட அவா், அவற்றுக்கு விரைந்து தீா்வு காண அதிகாரிகளை அறிவுறுத்தினாா்.

திமுக ஒன்றியச் செயலா்கள் காசிவிஸ்வநாதன், சின்ன மாரிமுத்து, நவநீதகண்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் இம்மானுவேல், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத் தலைவா் ரமேஷ், எப்போதும்வென்றான் ஊராட்சித் தலைவா் முத்துக்குமாா், சமூக வலைதள அணி பொறுப்பாளா் ஸ்ரீதா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.