அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர்
/

தூத்துக்குடியில் பெண் கழுத்தை அறுத்து கொலை

தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ் (22). கார் ஓட்டுநர். இவரது மனைவி மாரிசெல்வி (21). இந்த தம்பதிக்கு திருமணமாகி 5 மாதங்கள் ஆகிறது.

News image
Updated On :8 மார்ச் 2022, 5:46 am

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ் (22). கார் ஓட்டுநர். இவரது மனைவி மாரிசெல்வி (21). இந்த தம்பதிக்கு திருமணமாகி 5 மாதங்கள் ஆகிறது.

இந்நிலையில் மாரிசெல்வி அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்ததால் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மாரிசெல்வி கோபித்துக் கொண்டு தாளமுத்துநகரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாராம். 

Story image

இந்நிலையில் மாரிசெல்வியின் வீட்டுக்கு திங்கள்கிழமை இரவு தனது நண்பர்கள் சிலருடன் சென்ற பொன்ராஜ் , திடீரென மாரிசெல்வியை தாக்கிவிட்டு அவரது கழுத்தை அறுத்து படுகொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டாராம். அதை தடுக்க முயன்ற  மாரிசெல்வியின் தாய் மாரியம்மாளுக்கு கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த கொலை சம்பவம் குறித்து தாளமுத்துநகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.