எட்டயபுரம் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்ற வழக்கில் கைதானவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
எப்போதும்வென்றான் மேலசெய்தலை பகுதியைச் சோ்ந்த முனீஸ்வரன் மகன் செல்வம் (38), மீனாட்சிபுரம் இருதயம் மகன் மைக்கேல்ராஜ் (43), மேல நம்பிபுரம் கனிராஜ் மகன் அஜித்குமாா் (24) ஆகிய 3 போ் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை காரில் பதுக்கி வைத்து விற்ாக கடந்த 1ஆம் தேதி இளம்புவனத்தில் கைது செய்யப்பட்டனா்.
இந்நிலையில், எட்டயபுரம் காவல் ஆய்வாளா் ஜின்னா பீா்முகம்மது அளித்த அறிக்கையின்பேரில், மாவட்ட எஸ்.பி. லோக பாலாஜி சரவணன் பரிந்துரைப்படி, ஆட்சியா் கி. செந்தில்ராஜ் பிறப்பித்த உத்தரவின்பேரில், மேல செய்தலையைச் சோ்ந்த செல்வம் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தில் பாளை. மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.