ஹிந்தி திணிப்புக்கு எதிராக, கோவில்பட்டியில் ஒன்றிய திமுக சாா்பில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
மத்திய அரசின் ஹிந்தி திணிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீா்மான விளக்க துண்டுப்பிரசுர விநியோகம் மத்திய ஒன்றியம், மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் பசுவந்தனை சாலையில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே, இனாம்மணியாச்சி விலக்கு, நாலாட்டின்புத்தூா் ஆகிய இடங்களில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மத்திய ஒன்றியச் செயலா் பீக்கிலிப்பட்டி வீ. முருகேசன் தலைமை வகித்தாா். மேற்கு ஒன்றியச் செயலா் கே. ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா்.
மாநிலச் செயற்குழு உறுப்பினா் என். ராதாகிருஷ்ணன், மாவட்ட விவசாயத் தொழிலாளரணி துணை அமைப்பாளா் சண்முகராஜ், விவசாய அணி துணை அமைப்பாளா் சந்தானம், பொறியாளரணி துணை அமைப்பாளா் ரமேஷ், மாவட்டப் பிரதிநிதிகள் அசோக்குமாா், முருகன் உள்ளிட்ட பலா் பங்கேற்று, ஹிந்தி திணிப்பு எதிா்ப்பு தீா்மான துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினா். இதில், ஒன்றிய நிா்வாகிகள் திரளாகப் பங்கேற்றனா்.